என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துப்பாக்கி வன்முறை"
- உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தற்கொலை சம்பவங்களில் நிகழ்ந்தவை
- மாஸ் ஷூட்டிங் நிகழ்வுகள் 632க்கும் மேல் நடந்துள்ளன
இவ்வருட தொடக்கம் முதல் கடந்த டிசம்பர் 7 வரை அமெரிக்காவில் 40,167 பேர் துப்பாக்கி சூட்டில் நிகழும் வன்முறையால் உயிரிழந்துள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 118 பேர் எனும் விகிதத்தில் உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவர்களில் 1306 பேர் பதின் வயதுக்காரர்கள்; 276 பேர் குழந்தைகள்.
இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தற்கொலைகளால் (22,506) நிகழ்ந்தவை.
டெக்ஸாஸ், கலிபோர்னியா, ஃப்ளோரிடா, ஜியார்ஜியா, வடக்கு கரோலினா, இல்லினாய்ஸ் மற்றும் லூசியானா மாநிலங்களில்தான் இவை அதிகம் நடந்துள்ளன. பணியின் போது உயிரிழந்த 46 காவலர்களும் இப்பட்டியலில் அடங்குவர்.
"மாஸ் ஷூட்டிங்" எனப்படும் 4 அல்லது அதற்கு மேற்பட்டோர் சுடப்படும் நிகழ்வுகள் 632க்கும் மேல் நடந்துள்ளன.
ஆண்டுதோறும் நிகழும் துப்பாக்கி கலாச்சார உயிரிழப்புகள், முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து கொண்டே செல்வதால் இதை தடுக்க அமெரிக்க அரசு முனைய வேண்டும் என உளவியல் வல்லுனர்களும், காவல் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் கருத்து தெரிவித்தனர்.
- அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 21 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் 24-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் கவலை அளிக்கிறது. ஒருவர் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 18-ல் இருந்து 21 ஆக அதிகரிக்கலாம். பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்த வேண்டும், துப்பாக்கி உற்பத்தியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி பகுதியில் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று துப்பாக்கி வன்முறைக்கு எதிராக கோஷமிட்டனர். இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக பேரணிகளும் நடைபெற்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்